தமிழக அரசுக்கு சிபிஎம் மாநிலக்குழு வலியுறுத்தல்
சென்னை, மே 25- கந்துவட்டிக்கொடுமையால் திருப் பூர் அவினாசியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலைக்கு காரணமான அநியாய வட்டிக் கும்பல்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டை யில் மே 24, 25 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார். அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சி யின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பின ரும் முன்னாள் ஒடிசா மாநிலச் செயலாள ருமான தோழர் சிவாஜி பட்நாயக் மறை வுக்கு மாநிலக்குழு அஞ்சலி செலுத்தியது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே, சென்னை, சிதம்பரம், கோவில்பட்டி என பல பகுதி களிலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட வர்கள் தற்கொலைக்கு முயலும் நிகழ்வு கள் அதிகரித்து வருகின்றன. மே 24 அன்று திருப்பூர் மாவட்டம், அவினாசி யில் நடந்திருக்கும் கந்துவட்டி கொடு மையும், பரிமளா (30) என்ற இளம் பெண் தற்கொலையும் அதிர்ச்சி தருகிறது. கணவர் வீட்டில் இல்லாதபோது, மனைவி பரிமளாவையும், இரண்டு குழந்தைகளையும் கந்துவட்டிக் கும்பல் சாதிய, பாலியல் அடிப்படையில் திட்டி அவமதித்துள்ளனர். இதனால் மன உளைச் சலுக்கு ஆளான பரிமளா வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த தற்கொலைக்கு காரணமான வர்கள் மீது கந்துவட்டி தடுப்பு, வன் கொடுமை தடுப்பு மற்றும் போக்ஸோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடுமையாக தண்டிப்பதுடன், உயிரி ழந்த பரிமளாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என வலி யுறுத்துகிறோம். தமிழ்நாடு முழுவதுமே அதிகரித்து வரும் கடன் தொல்லை, கந்துவட்டி, நுண் நிதிக் கடன் கொடுமைகளின் தீவி ரத்தை காட்டுவதாக தொடர் நிகழ்வு கள் அமைந்திருக்கின்றன. எனவே, கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அம லாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது. கடன், கந்துவட்டி துன்புறுத்தல் களில் இருந்து மக்களை காத்திட... * நியாயமான வட்டியில் கடன் வாய்ப்புகளை கூடுதலாக்க வேண்டும். அதற்காக அரசு வங்கிகள்/கூட்டுறவு வங்கிகளுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தலாம். * தனித்து வாழும் பெண்கள் புதி தாக தொழில் தொடங்க, குறைந்த வட்டி யில் முன்னுரிமைக் கடன் வழங்க வேண்டும். * நுண்நிதி நிறுவனங்களின் சட்ட விரோத போக்குகளை தடுத்து, முறைப் படுத்த வேண்டும். * சுய உதவிக்குழு வழியாக கடன் மற்றும் உதவிகளை அதிகரிக்க வேண்டும். * கொரோனா ஊரடங்கு காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
ஜூனியர் விகடன் மீதான வழக்கினை கைவிடுக!
ஒரு தனியார் நிறுவனத்திடம் ஜூனி யர் விகடன் இதழின் பெயரைப் பயன் படுத்தி, ஒரு தனி நபர் மிரட்டி பணம் கேட்டார் என்கிற புகாரின் பேரில் அந்த நபர் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சி யாக, ஜூனியர் விகடன் இதழ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி யான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு தனியார் நிறு வனம் கொடுத்த வழக்கை பயன்படுத்தி ஜூனியர் விகடன் இதழ் குறிவைக்கப் படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. அதிகாலை கைது செய்வது, பத்தி ரிகை மீது வழக்கு போன்ற காவல் துறை நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்க முடி யாதவை. காவல்துறையின் இந்த நடவடிக்கை கள் கைவிடப்பட வேண்டும் என்றும் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு வலியுறுத்துகிறது.