tamilnadu

img

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 28 - தமிழ்நாடு அரசு தனது  வாக்குறுதிகளை நிறை வேற்றக் கோரி வெள்ளி யன்று (ஜூலை 28) சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,  ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெறும் உரி மையை மீண்டும் வழங்க வேண்டும், 16.11.2012 தேதிக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும், உயர் நீதிமன்ற தீர்ப்பு படி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை -  ஆசிரியர் இயக்கங்களின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கள் அ.மாயவன், ஏ.சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன், திமுக தலை வர் மு.க. ஸ்டாலின்  “எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களின்  கோரிக் கைகளை ஆதரிப்பதாக கூறினார். ஆட்சிக்கு வந்து  2 ஆண்டுகளுக்கு மேலாகி யும் அவற்றை நிறைவேற்றா மல் உள்ளார்” என்றார். ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் என நிதி அமைச்சர் கூறுவதை ஏற்க  முடியாது. இந்த பிரச் சனையில் முதலமைச்சர் பேசாமல் இருப்பது வருத் தம் அளிக்கிறது. கோரிக் கைகள் குறித்து அழைத்துப் பேசி தீர்வு காணாவிடில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்றார்,