tamilnadu

img

பெண்ணை மதிக்க குடும்பங்களில் கற்றுக் கொடுங்கள் - த.சந்தியா

த.சந்தியா மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மதுரை புறநகர்

மனித குலம் சமத்துவத்தை அடைய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. சமூக சமத்துவத்தில் பெண்-ஆண் சமத்துவம் முதன்மையானது. தற்போதுள்ள சமூக அமைப்பில் அதற்கான சமூக சூழல் குறைவாகவே உள்ளது. ஏனெனில் பழைய சமூக கட்டமைப்பின் மனித சிந்தனையானது இன்னும் தொடர்கிறது. தற்போதைய சமூக அமைப்பில் இருக்ககூடிய பெரும்பான்மை சிந்தனை போக்கு மக்களுக்கு இடையே பிரிவினை கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. பெண்களையும் ஆண்களையும் பிரித்து அமர வைப்பது, முன்னுரிமை என்று தள்ளி வைப்பது சம வாய்ப்பு ஆகாது.

கலாச்சாரமும் பாலின உறவுகளும்

சமூக உறவுகள் பெண்-ஆண் உறவுகள் மட்டுமின்றி பால் புதுமையர் (LGBTQ+) என மற்ற பாலினத்தவர்களின் உறவுகளையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ளோம். ஆனால் இன்னும் பெண்-ஆண் பழகுவதையே புரிதல் இல்லாமல் அணுகும் நிலை உள்ளது. சமூகத்தில்8 பெண்ணுக்கு பேசுவதற்கே இடம் அளிக்கப்படுவதில்லை. ஒரு பெண் இதைத்தான் பேச வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக சூழலுடன் சேர்ந்த பழக்கவழக்கங்களும், உறவுநிலைகளும் மாறி கொண்டு தான் வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் கலாச்சார பழக்க வழக்கங்களைக் கொண்டு பெண்ணும் ஆணும் பழகுவதையே கட்டுப் படுத்துகின்றனர்.

பெண்களின் சமூக வாய்ப்புகள் குறைவு

இந்த சமூகத்தில் ஆண்களுக்கு வழங்குவது போல் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பெண்களின் சமூக உலவுதல் என்பது மிகவும் குறை வாகவே நிகழ்கிறது. பெண்களும் ஆண்களைப் போல சமூகத்தில் அதிகம் இயங்கி னால் தான் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமையும்.  பாலின பாகுபாட்டைக் களைப்பது தான் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும். இன்றைய தலைமுறையினர் பாலின பாகுபாடு மட்டுமின்றி பாலின கண்ணோட்ட மற்றே பழகுகின்றனர். எனவே இளைய தலைமுறையிடம் பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுப்பதும், பாலின சமத்துவம் பேசுனும். குடும்பங்களில் அது திகழ்வதும் அவசியம் ஆகும்.