tamilnadu

img

இறக்கு கூலியை உயர்த்தி வழங்குக!

சென்னை, செப். 27- டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்களின் இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு புதனன்று (செப். 27) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில்  உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர் சங்கம், அம்பத்தூர் டாஸ்மாக் 1, 2, 3 குடோன் சங்க கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கட பதி, பொதுச் செயலாளர் இரா. அருள்குமார், சுமைப்பணி மாவட்ட துணைத் தலைவர் ஜி.கோதண்டன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் இது குறித்து மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி கூறுகையில், “டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி தற்போது 5 ரூ 50 காசு வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 8  ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார். டாஸ்மாக் நிர்வாகம் போனஸ் வழங்க வேண்டும். ஒரு சில குடோன்களில் போனஸ் வழங்கப் படுகிறது, அதுவும் ஒரே சீராக வழங்கப்படுவதில்லை. எனவே தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி, அனைத்து தொழிலா ளர்களுக்கும் ஒரே மாதிரியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்றுக் கூலி ஒவ்வொரு குடோ னில் மாறுபடுகிறது. அனைத்து குடோன்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான கூலி வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வில்லை என்றால் மாநிலம் முழு வதும் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரி வித்தார். முன்னதாக புதிதாக 3ஆவது குடோனில் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் ஆர்.வெங்கட பதி ஏற்றி வைத்தார். சி.திரு வேட்டை பெயர் பலகையை திறந்து வைத்தார்.