tamilnadu

img

ஆணையர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 7– டாஸ்மாக் நிறுவனத்தில் 480 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களை, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பணி  நிரந்தர தகுதி வழங்கல் சட்டம் 1981 பிரிவு  (3)ன் கீழ் பணிநிரந்தரம் செய்ய வலி யுறுத்தி சிஐடியு வழக்கு நடத்தி வருகிறது. இந்த வழக்குகளை விசாரித்து வரும் உதவி  தொழிலாளர் ஆணையர் மற்றும் நிலை அதிகாரிகள் விசாரணை முடித்து இறுதி உத்தரவுகளை பிறப்  பிக்காமல் உள்ளார். பல மாவட்டங்க ளில் விசாரணையை இழுத்தடித்து வரு கின்றனர். இந்நிலையில், 480 நாட்கள் பணி  முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும், பணி நிரந்தர வழக்கு விசா ரணையில் காலதாமதம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம் மேளன தலைவர் இ.பொன்முடி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்  பாட்டத்தில் சிஐடியு உதவி பொதுச்செய லாளர் எஸ்.கண்ணன், சம்மேளன  பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன், சிஐடியு மாநில துணைத்தலைவர் பா.பாலகிருஷ்ணன், சம்மேளன துணை பொதுச் செயலாளர்கள் ஜான் அந்தோணி ராஜ், கே.பி.ராமு, எம்.முரு கன், பொருளாளர் ஜி.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்தை  சந்தித்து தலைவர்கள் மனு அளித்த னர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், சட்ட அமலாக்கம் குறித்து சட்டத் துறையின் கருத்துக்களை கேட்டு  மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.