புதுச்சேரி, ஜூன் 26- பன்முகத் தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத் தும் புதுச்சேரி அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பிரதேச மாநாடு வலி யுறுத்தியுள்ளது. முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11ஆவது மாநாடு முல்லை நகரில் ஞாயி றன்று (ஜூன் 26) நடைபெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர் வீர.அரி கிருஷ்ணன், கவிஞர் வில்லியனூர் பழனி, பாவலர் சண்முகசுந்தரம்,கோவிந்தராசு ஆகி யோர் தலைமை தாங்கினர். தமுஎகச தமிழ் மாநில பொருளாளர் ராமச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் உமா அமர்நாத் வேலை அறிக்கை யையும், பொருளாளர் கலியமூர்த்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கலை இலக்கிய அறிக்கையை அன்பழ கனும், பண்பாட்டு அறிக்கையை லெனின்பா ரதியும் சமர்ப்பித்தனர். துணைப் பொதுச் செயலாளர் களபிரான், கலை இலக்கிய பெரு மன்றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
புதிய கல்விக்கொள்கையை புதுச்சேரி யில் புகுத்தும் நோக்கில் சிபிஎஸ்சி கல்வித்திட் டத்தை அமல்படுத்தும் முயற்சியை அரசு கை விட வேண்டும், மாணவர்களின் மேல்படி ப்பை கேள்விக்குறியாக்கும் கியூட் நுழைவுத் தேர்வை புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வருவதை கைவிட வேண்டும், புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப் படாமல் இருக்கும் கலைமாமணி விருது களை உடனே வழங்க வேண்டும், கலை இல க்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்வு களுக்கு கம்பன் கலை அரங்கத்தை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும், நூல் வெளியீட்டிற்கான மானியத் தொகையை தொடர்ந்து அளிப்பதை அரசு உத்தர வாதப்படுத்த வேண்டும், அரசு விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் புதுச்சேரி யை சார்ந்த கலைஞர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.