tamilnadu

img

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு: முதல்வர் அஞ்சலி

சென்னை, நவ. 22- தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமாகிய அவ்வை து.நடராசன் (85) வயது மூப்பின் காரணமாக திங்களன்று (நவ. 21) காலமானார். திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு அருகே உள்ள அவ்வை யார் குப்பம் எனும் சிற்றூரில் அவ்வை துரைசாமி க்கு மகனாகப் பிறந்த அவ்வை நடராசனின் இயற் பெயர் சிவபாதசேகரன். பின்னர் தன்  தந்தையால் நடராசன் என பெயர் மாற்றம் அடையப் பெற்றார். மேடை யில் வீசிய மெல்லிய பூங்காற்று என  திருவிகவை சொல்வார்கள். அதன்  பின் அவ்வை நடராசனை தமிழுலகம்  இவ்வாறு பாராட்டி மகிழ்ந்தது.

அவ்வை நடராசன் மதுரை தியாக ராயர் கல்லூரியில் விரிவுரையாள ராகப் பணியாற்றிய காலத்தில் சாலமன் பாப்பையா, கவிஞர் மு.மே த்தா, நா.காமராசன், கா.காளிமுத்து போன்றோர் அவரின் மாணவர்களாக இருந்து கல்வி கற்றனர். தமிழறிஞர் மு.வரதராசனாரின் மீதான ஈடுபாட்டால் மதுரையில் இருந்து சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றார். முன்னாள் முதல்வர்கள் மு.கரு ணாநிதி, எம்ஜிஆர், ெஜ.ெஜயல லிதா போன்றோரின் அன்பைப் பெற்று தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் தமிழக அரசுச் செயலாளர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் என வாழ்நாள் முழுவதும் தமிழோடு ஊடாடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றினார். 2011ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின்  நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ  விருதை ஒன்றிய  அரசு வழங்கி கவுரவித்தது. அவ்வை நடராசனுக்கு அவ்வை ந.கண்ணன், அவ்வை ந.அருள், அவ்வை ந.பரதன் என மகன்கள் உள்ளனர். இதில் முனைவர் அவ்வை  அருள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். முப்பொழுதும் தமிழை பேசி பேசி தொண்டாற்றிய வள்ளலார் வழி  வந்த அவ்வை து.நடராசன் உடல்  மேல் திருக்குறள், சங்கத்தமிழ், புற நானூறு நூல்கள் வைக்கப்பட்டுள் ளன.

முதல்வர்-தமுஎகச அஞ்சலி

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ றிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ெஜகத்ரட்சகன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் மறைமலை இலக்கு வனார், சிங்காரவேலர் ஆய்வாளர் புலவர் பா.வீரமணி, காங்கிரஸ் கட்சி  தலைவர்களில் ஒருவரான உ.பல ராமன், தமுஎகச தலைவர்களில் ஒருவரான இரா.தெ.முத்து உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் இரங்கல் 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தொண்டறம் தொடர்ந்து தமிழ் இமயமாக வாழ்ந்து நம் நெஞ்சில் நிறைந்தவர் அவ்வை நடராசன். அவரது மறை வால் துயரில் இருக்கக்கூடிய அவரின் குடும்ப உறவுகளுக்கும், தமிழ்  நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன்,“தமிழ்நாட்டின் சிறந்த கல்வியாளரான அவ்வை நடராசன் உயர்கல்வியில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.  இரு மொழிகளிலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள் ளார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன்” என கூறியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.