tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்  கோடை கொண்டாட்ட போட்டிகள்

இராமநாதபுரம், மே 28- இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது நூல கத்துறை தங்கச்சிமடம் கிளை நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இராமேஸ்வரம் வட்டாரக் கிளை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டப் போட்டிகள் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளை நூலகர் ஜேசுதாஸ் தலை மையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அறிவியல் இயக்க இராமேஸ்வரம் வட்டார  தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். நூல கத்தின் பயன்பாடு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்  கத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரப் பொருளாளர் ஜெ.ஜே.லியோன் சிறப்புரை ஆற்றினார். இராமேஸ்வரம் வட்டார கிளை செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார். இதில் வட்டார துணைச் செயலாளர் ஜெரோம், வட்டா ரப் பொருளாளர் லியோன் தங்கச்சிமடம் கிளை நூலகர்  ஜேசுதாஸ், வட்டார துணைச் செயலாளர் ஜெரோம், முரு கேசன், ஆசிரியர்கள் விஜயா, செந்தில்குமார், சசிக்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மே 31 - பராமரிப்பு பணிக்காக மூடப்படும் ரயில்வே கேட்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 28- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - அத்திக் குளம் ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மே 31 அன்று காலை 8 மணி முதல்  மாலை 6 வரை வழிதடம் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மாற்று வழித் தடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறி வுறுத்தப்பட்டுள்ளது.  

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 28- கிருஷ்ணன்கோவில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மதிவாணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து சென்ற போது, விழுப்பனூரை சேர்த்த காசி அம்மாள் என்பவர்  போதை பொருளை மாணவர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

திருவில்லிபுத்தூரில் ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 28- திருவில்லிபுத்தூர் நகர் சிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் காவல் நிலைய சார்பு  ஆய்வாளர் ராமநாதன் ரோந்து சென்ற போது சந்தே கத்திற்கு இடமளிக்க கூடிய வகையில் நின்று கொண்டி ருந்த அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவரை விசாரித்தபோது அவரிடம் 50 கிராம் எடை யுள்ள கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது  வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

இராமநாதபுரம், மே 28- இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதி யில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும்  நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாக னங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட  நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிர மத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.  

பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

இராஜபாளையம், மே 28- இராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றுவரும் இடத்தில் உள்ள தோரண வாயிலில் திடீரென மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய  பாட்டிலை வீசினார். இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊர்த் தலைவர் இசக்கிமுத்து வடக்கு  காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வழக்குப் பதிவு செய்து துரிதகதி யில் விசாரணை செய்து மாப்பிள்ளை சுப்பையா தெரு வைச் சேர்ந்த தலக் மகன் கருத்தப்பாண்டியன் (25) என்ப வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதனையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாது காப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவில்  ஒரு பிரிவினர் புறக்கணிப்பு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இராமநாதபுரம், மே 28- இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பனிச்சகுடி கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி யம்மன் மற்றும் கருப்பன் ஆலயத்தில் திருவிழா நடைபெற விருக்கிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தி னரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்  பாடு நடைபெற்று வருவதாக தெரிகிறது. முகூர்த்தக்கால்  ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப் பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தி லும், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார்  மனு அளிக்கப்பட்டதாகவும், இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த குடும்பத்தினர் வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.