தாராபுரம், ஆக.20- தமிழ்நாடு வரு வாய்த்துறை அலு வலர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ச.முருகதாஸ் கால மானார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவ ரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவருமான தோழர் ச.முரு கதாஸ் உடல்நலக்குறைவால் காலமா னார். இவர் தாராபுரம் கோட்ட கலால் அலு வலராக பணியாற்றி வந்தார். அரசு ஊழி யர்களின் உரிமைக்காக இறுதி வரை போராடி வந்தார். திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும், திருப்பூர் வடக்கு வட்டாட்சியராகவும் பணியாற்றி யுள்ளார். சிறப்பான பணிக்காக மாவட்ட ஆட்சியரின் விருதுகளை பெற்றுள்ளார். அரசு ஊழியராக மக்களின் நன்மதிப்பை பெற்றவராகவும் விளங்கியவர். திருப்பூர் புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தார். இவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.