சென்னை, மே 29- ‘கேலோ இந்தியா’ போட்டிகளை, தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு அனு மதி அளித்துள்ளதால், தமிழ்நாடு வீரர், வீராங்கனை யர் உற்சாகம் அடைந்துள்ள னர். இந்தியாவை விளை யாட்டு துறையில் சிறந்த நாடாக்கவும், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டி களில் இந்தியர்கள் அதிக பதக்கங்ளை பெற்று, நாட்டை பெருமைப்படுத்த வும், ‘கேலோ இந்தியா’ திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. இதன்படி, வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபடி, கோ-கோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து, பளு தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, தலைசிறந்த வீரர், வீராங்கனையரை, ஒன்றிய அரசு தேர்வு செய்து சர்வ தேச தரத்துக்கு உயர்த்து கிறது. இதற்கான பயிற்சிகள், மைதானங்கள், மேம்படுத் தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தாண்டுக் கான கேலோ இந்தியா போட்டிகளை, தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளை, தமிழ்நாடு அரசு மிக விரிவாக நடத்தி, தமிழ் பண்பாட்டையும், விருந்தோம்பலையும் நிரூபிக்கும் என, முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கேலோ இந்தியா போட்டிகளை, வருகிற டிசம்பருக்குள் நடத்த அரசு திட்டமிட் டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள திறமையாளர்களை சந்திக்கவும், அவர்களின் திறமையை நேரில் காணவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனையர் உற்சாகம் அடைந்துள்ளனர்.