tamilnadu

img

9 திட்டங்களுக்கு தலா வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு தமிழக புதிய ரயில்வே வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு

மதுரை,பிப்.3- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ கத்திற்கான புதிய ரயில்வே வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிக்கப் பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யை தொடர்ந்து பிங்க் புக் (PINK Book) என்று சொல்லப்படும் இரயில்வே திட்ட புத்தகம் வெளியிடப் பட்டது. அதில் தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு-புத்தூர்; ஈரோடு- பழனி;சென்னை -கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி- இருங் காட்டுக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்-  தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கி்றேன். 

இராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய  வழித்தடத்திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவை. அதற்கு ரூ.59 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. அதை வரவேற்கிறேன்.  காட்பாடி -விழுப்புரம் இரட்டைப் பாதை  திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு  ரூ. 1,600 கோடி தேவை .ஆனால் வெறும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. அதேபோல ஈரோடு -கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளது வெறும் ஒரு கோடி ரூபாய். தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங் களுக்கு ஒதுக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக் குடி இரட்டைப் பாதை திட்டமும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில்  இரட்டைப் பாதை திட்டமும் கன்னியாகுமரி- நாகர் கோவில் திருவனந்தபுரம் இரட்டை பாதை திட்டமும் தொடர்ந்து காலதாமதமானது. இதுகுறித்து பல முறை அரசின் கவ னத்துக்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து கடந்த ஆண்டும் கடும் எதிர்வினையாற்றினோம்.

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி இரட்டைப் பாதையில்  போதிய நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில் திட்டத்திற்கு 1700 கோடி தேவை. இதுவரை ரூ.750 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.360 கோடியும் வரும் ஆண்டில் 425 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம்  விரைந்து முடிவடைய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.  மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2021-22)  ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டுக்கு ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்ததற்காக நன்றி.

திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.900 கோடி முதலீடு செய்ய வேண்டும் இதுவரை ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ரூ.700 கோடியும் அடுத்த ஆண்டுக்கு ரூ.400 கோடியும்  ஒதுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த  திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்து கிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இரட்டைப் பாதை முடி வடைந்து போக்குவரத்து இலகுவாகும்.  தமிழக புதிய வழித்தடத் திட்டங் களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை  பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறை வேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலி யுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.