tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சட்டமியற்றுக: திண்டுக்கல், சின்னமனூரில் ஆர்ப்பாட்டம்

தேனி ,ஏப்.20-  சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த ,தமிழ்நாடு சட்டமன் றத்தில் சட்டம் இயற்ற கோரி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டுக்கல், சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .  ஆர்ப்பாட்டத்திற்கு  கட்சியின் சின்னமனூர் ஒன்றிய குழு செயலாளர்  கே.எஸ். ஆறுமுகம் தலைமை தாங்கி னார். தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் டி.கே. சீனிவாசன், மாவட்ட செயலாளர் இ .தர்மர், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, அய்யங்காளை,கே .பாண்டியன், சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.முருகன்,  விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி  கண்ணன் ஆகி யோர் பேசினர். திண்டுக்கல்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக திண்டுக்கல் நாகல்நகரில்  நடைபெற்ற  ஆர்ப்பாட் டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கே.டி.கலைச் செல்வன், மாவட்ட நிர்வாகிகள் கே.அருள்செல்வன், டி.முத்துச்சாமி, சோ.மோகனா, சுரா.தங்கபாண்டியன் (தமிழர் சமூக நீதிக்கழகம்),  ராமசாமி (விவசாயிகள் சங்கம்), பொன்ராஜ் (குற வன்பழங்குடி) என பல்வேறு தோழமை சங்கத்தலைவர்கள் பேசினர்.