சென்னை, செப்.13- தமிழ்நாடு சட்டப் பேர வையின் கூட்டத் தொடரை அடுத்த மாதம் நடத்து வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேர வையின் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது.இறுதி யாக மானியக் கோரிக் கைகள் நிறைவேற்றப் பட்டன. இந்த கூட்டத்தொடரின் போது 17 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு ஏப்ரல் 21 அன்று தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. அரசு செலவினங்க ளுக்கு நிதி ஒப்புதல் வழங்கு வது உட்பட பல்வேறு காரணங்களுக்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். அந்த வகை யில் தமிழ்நாடு சட்டப்பேர வையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி பேரவையை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை நாள் சட்டப்பேரவையை நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். அநேக மாக 5 நாட்கள் சட்டசபை நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, காவிரி நீர் பிரச்சனை பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.