tamilnadu

img

மத வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்காத தமிழகம்: சிபிஎம்

சென்னை,அக்.10- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீண்டகால சிறைவாசிகளின் முன்விடு தலை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் மா.சின்ன துரை,“ நாட்டில் தமிழ்நாடு தான் மத வெறுப்பு அரசிய லுக்கு இடமளிக்காத  ஒரு  மாநிலமாக இருக்கிறது” என்றார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பதற்கு தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் உரிய கவனம் செலுத்து கிறார்கள். 36 இஸ்லாமிய இளைஞர்கள் வயது மூப்பின் காரணமாக வும் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் கூட ஐந்தாண்டுகள், ஏழு ஆண்டு கள் என்று சிறையில் சித்ரவதைபடுகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய தீங்காக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தபிறகு, ஆளுநரின் ஒப்புதல் பெற முடியாமல் காலம் தாழ்த்துவது என்பதை ஏற்க முடியாத மிகப்பெரிய கொடூரமாக பார்க்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அப்போது, 36 இஸ்லாமியர்களை விடுதலை பெறுவதற்கு நமது அமைச்சரவை தீர்மா னம் நிறைவேற்றியதை ஒன்றிய அரசின் கவனத்துக்கும்,  ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஒப்பு தல் பெற்று விடுதலை பெறு வதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டும்என்றும் வலி யுறுத்தினர். எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.