சென்னை,ஜூன் 8- காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவது குறித்து வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட த்தில் விவாதிக்க இருப்பதாக ஆணை யத்தின் தலைவர் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடுமை யான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்திருக்கும் அறிக்கையில் இந்த அணை கட்டப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆணையம் இவ்வாறு அறிவித்திருப்பது வரம்புமீறிய செயல் என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மேகதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் தமிழகம் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். ஏற்க னவே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாட் டிற்கான தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டிருக்கிற நிலையில், தீர்ப்பின் படி மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரையும் கிடைக்காமல் செய்யவே இந்த அணை கட்டப்படு கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் 17ந் தேதி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேக தாட்டு அணை தொடர்பானவற்றை உடனடியாக நீக்கி அறிவித்திட வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு, காவிரியின் மீதான பாசன உரிமையை நிலைநிறுத்தும் வகையில் விழிப்புடன் செயல்படுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.