தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று ஒரு நாள் பயணமாக தில்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வைச் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் மே 5 அன்று தமிழகம் வருகை தந்து பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.