ஈரோடு, பிப்.25- ஆட்சியில் இருந்த அதிமுக கஜானா வை காலி செய்து, கடன் வைத்து சென்று விட்டதால், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க தாமதமாகியது. நாங்கள் சொன் னதை செய்பவர்கள் மார்ச் மாத பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிப்பு இடம்பெறும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரு மான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் திங்களன்று நடை பெற உள்ளது. பிரச்சாரத்தின் இறுதி நாளான சனியன்று மு.க.ஸ்டாலின் சம்பத் நகரில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வர வேண்டும், அதன் வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும் என்று நம் பிக்கையோடு நீங்கள் எல்லாம் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தீர்கள். ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத் தில், சொன்னதைச் செய்வோம், செய்வ தைச் சொல்வோம் என்பது மட்டுமல்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய் வான் என்பதுதான்.
மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு மதிய உணவு திட்டமிருந்தாலும், காலை யில் பள்ளிக்கு வரும் 80 சதவீதம் மாண வர்கள் எதுவும் சாப்பிடாமல் வருகின்றனர். இதையறிந்து முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அறிவித்து நிறைவேற் றப்படுகிறது. விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள், செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் உலக அளவில் பெருமைப் படத்தக்க வகையில் நடத்தி பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளோம். ஒவ் வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் ஆண் டிற்கு 10 கோரிக்கைகளை பெற்று நிறை வேற்றித்தர வேண்டும் என்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட் டத்தை அறிவித்து நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம். அதேபோல் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நான் முதல் வன் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை பேரும் அவர்கள் தொழிலில், கல்வியில், வாழ்க்கை முன்னேற்றத்தில் முதல்வராக வரவேண்டும் என்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
உழவர் சந்தை, சமத்துவபுரம், பெரி யார் பிறந்த நாளை சமூக நீதி நாள், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங் கருணை நாளாக அறிவிப்பு, பெரியார் நெஞ்சில் தைத்துக் கொண்டிருந்த முள்ளை அகற்ற வேண்டும் என்ற வகையில் கலைஞர் நினைத்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நிறைவேற்றியிருக்கிறோம். மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள். 20 கலை, அறிவியல் கல்லூரிகள் உரு வாக்கப்பட்டிருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவி களுக்கு மாதம் ரூ.1000 என்று பல திட் டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கி றோம். நீட் தேர்வு விலக்கு சட்டம் தமிழ்நாட்டில் 2 முறை நிறைவேற்றி ஆளுநரிடத்தில் அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் ஆளு நரோ, மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் என்னுடைய காலத்தில் நீட் தேர் விற்கு விலக்கு பெற்றே தீர வேண்டும் என் பது தான் என் லட்சியம், கொள்கை.
எதிர்க்கட்சி தலைவர் திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்கிறார். கண் மருத்துவரை பார்த்து கண்ணாடி வாங்கிப் போட்டு படித்துப் பாருங்கள், நான் பேசியதை கேட்டுப் பாருங்க, உண் மையா, இல்லையா என்பதை சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள் ளுங்கள். 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தான் தேர்தல் வாக்குறுதிகளாக சொல்லியிருக்கிறோம். அதில் 85 சதவிகிதம் நிறைவேற்றியிருக்கி றோம். இந்த ஆண்டிற்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றிக் காட்டுவான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதில் முக்கியமானது பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைத் தொகை மாதம் ரூ. ஆயிரம் வழங்குவது. அதிமுக ஆட்சியில் கொள்ளையடித்து, கஜானாவை காலியாக வைத்தது மட்டுமல்ல, கடனையும் வைத்து விட்டுச் சென்றனர். அந்த நிதி நிலையை சரி செய்து கொண்டுள்ளோம். மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்பதை அறிவிக்கப் போகிறோம். இது மக்களுக்காகப் பாடுபடக்கூடிய ஆட்சி. ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுகவும், கூட்டணிக் கட்சி உறுப்பி னர்களும் நாடாளுமன்றத்தில் வாக்க ளித்தோம். ஆனால், அதிமுகவினர் ஆத ரித்து வாக்களித்தனர். அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் நிறை வேறியிருக்காது. அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீடு கலைஞ ரால் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சட்டமன்றத்தில் அவர் சார்பாக துணை முதல்வராக இருந்த நான் தான் முன் மொழிந்து பேசினேன். அந்த வாய்ப்பை எண்ணி பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த இடைத்தேர்தலை நீங்கள் எடைத்தேர்த லாக பார்க்க வேண்டும். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது, சொன்னதை செய்கி றார்களா, முறையாக ஆட்சி நடக்கிறதா என்பதை எடை போட்டு தீர்ப்பு வழங்க வேண்டும். கை சின்னத்திற்கு, இளங்கோ வனுக்கு வாக்களித்து அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டங்களில் வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்றனர்.