tamilnadu

img

அறிவுசார் மையம், நூலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறப்பு

அறிவுசார் மையம், நூலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறப்பு 

கும்பகோணம், மே 29-  கும்பகோணம் மாநகராட்சி வார்டு எண் 41, காந்தியடிகள் சாலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-இன் கீழ், ரூ.262.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டிடம் திறப்பு விழா வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து, கும்பகோணம் அறிவுசார் மையம் மற்றும் நூலக திறப்பு விழாவிற்கு குத்துவிளக்கு ஏற்றி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், கும்பகோணம் மாநகர மேயர். சரவணன், துணைமேயர். சுப தமிழழகன், ஆணையர் காந்திராஜ் மற்றும்   அனைத்து மண்டலக் குழுதலைவர்கள், நியமனக் குழுதலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்‌.