tamilnadu

img

இலங்கை கடற்படை கைதுசெய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,செப்.14- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்களை  விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி செப்டம்பர் 14  வியாழனன்று ஒன்றிய வெளியுறவுத் துறை  அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல் வர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் (பதிவு எண்கள் IND-TN-10-MM-407, IND-TN-08-MM-214 and IND-TN-16-MM-2046) மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல்  எல்லையைத் தாண்டி இலங்கை கடல்  எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த  மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது தமிழக மீனவர்களி டையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருகிறது. மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீன வர்களின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர் பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்புக்குள் சென்று விடுகிறது. இது போன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீன வர்களுக்கும், அவர்களது குடும்பத்தின ருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர் களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அர சுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். மேலும்,  பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர் களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திட வும், இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வி னைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.