பாஜக மாநிலத் தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமாரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதும், பின்னர் திடீரென இடையிலேயே அந்த சோதனை நிறுத்தப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக அமலாக்கத்துறையும், பாஜகவும் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
மூடி மறைக்கப்பட்ட சோதனை
கடந்த 27.9.2023 அன்று பாஜக மாநில தலைமை அலுவலக ஊழி யர் ஜோதிக்குமார் வீட்டில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகள் பற்றி அம லாக்கத்துறையோ, பாஜகவோ இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. இது அமலாக்கத்துறையின் மீது நம் பிக்கையின்மையை அதிகரித்துள் ளது. சாதாரணமாக அமலாக்கத் துறையின் சோதனைகள் மற்றும், அதுதொடர்பான விபரங்கள் பெரிய அளவில் பேசப்படுவது வழக் கமாக உள்ள நிலையில் இந்த சோதனை மூடி மறைக்கப்பட்டி ருக்கிறது.
எதனை கண்டுபிடிக்க ரெய்டு
இது கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. எனவே, அமலாக்கத் துறையும், பாஜகவும் பொதுமக் களுக்கு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட் டில் 5 மணி நேரம் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அமலாக்கத்துறை சோத னையின்போது பாஜக-வின் தென்சென்னை மாவட்டத் தலைவர்கள் மிக சாதாரணமாக சோதனை நடக்கும் இடத்திற்கு வரு வதும், வெளியே வந்து தொலைபேசியில் பேசுவது மாக இருப்பதற்கு அனு மதிக்கப்பட்டது எப்படி? பாஜக நிர்வாகிகள் மேலி டத்தில் தொடர்பு கொண்டு இந்த சோதனையை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதால் அமலாக்கத் துறை நிறுத்திவிட்டதாக சொல்வது உண்மையா? தவறாக ஒரு சோதனை நடத்தப்பட்டிருந்தால் பாஜக தரப்பிலிருந்து கண்ட னமோ, அமலாக்கத்துறை யின் தரப்பிலிருந்து விளக் கமோ அளிக்கப்படாதது ஏன்?
பொதுமக்களிடம் விளக்க வேண்டும்
எனவே, அமலாக்கத்துறையும், பாஜகவும் மேற்கண்ட அமலாக் கத்துறை சோதனை சம்பந்தமாக பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஒரு தவறை கண்டுபிடிப்பதற் காக அமலாக்கத்துறை வந்திருந் தது என்றும் மேலிட தலையீடு களின் காரணமாக அது நிறுத்தப் பட்டது என கருத வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறை யின் செயல்பாடுகள் குறித்து கடு மையான விமர்சனங்கள் எழுந் துள்ளன. எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் துறையாக அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவதும், அதே சமயம் பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்வதில்லை என்ற கடுமை யான விமர்சனங்களும் எழுந்துள் ளன. இதனை மேலும் உறுதிப்படுத் தும் வகையிலேயே மேற்கண்ட சம் பவம் நடந்துள்ளது என மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது. எனவே, உரிய விளக்கத்தை அமலாக்கத்துறை பொதுமக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது.