tamilnadu

img

மாநில அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை!

புதுதில்லி, ஜன. 5 - அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி யாக உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2011 - 2016 இடையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட தாக குற்றம்சாட்டி, தற்போதைய திமுக அரசில் மின்சாரம் மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  அமைச்சராக பதவி வகித்து வந்த  செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14 அன்று கைது  செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12 அன்று 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இதனால், செந்தில் பாலாஜி யிடம் இருந்த துறைகளை அமைச்சர் கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்து சாமி ஆகியோருக்கு பகிர்ந்தளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்ச ராக தொடர்வார்’ என்று அறிவித்தார். ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவ தாக தன்னிச்சையாக அறிவித்த ஆளு நர் ஆர்.என். ரவி, அடுத்த சில மணி நேரங்களில் அவராகவே அந்த உத்த ரவை நிறுத்தி வைப்பதாகவும் கூறி பின்வாங்கினார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு முன்னாள் எம்.பி.யும் அதிமுக நிர்வாகியுமான ஜெயவர்தன், வழக்கறிஞர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட் களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்த னர். அதேபோல செந்தில் பாலாஜி யை பதவி நீக்கம் செய்த ஆளுநர் ஆர்.என். ரவி, பின்னர் அந்த உத்த ரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல். ரவியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல’ என்று கூறினா லும், “இலாகா இல்லாத அமைச்ச ராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடி வெடுக்க வேண்டும்” என தீர்ப்ப ளித்தது. செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது. ஆனால், இதனை எதிர்த்து வழக்க றிஞர் எம்.எல். ரவி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வெள்ளியன்று இந்த வழக்கை நீதிபதி கள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சிறையில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது” என அறிவித்து, எம்.எல். ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.