சென்னை, மார்ச் 20- கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றாத வேளாண் பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 24 அன்று சென்னை யில் போராட்டம் நடைபெறும் என்று கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை சமர்ப்பித் துள்ளதை வரவேற்கிறோம். எதிர்கால திட்டம் என்ற வகையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற் றுள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் இன்று விவசாயிகள் சந்தித்து வரும் அடிப்படையான பிரச்சனை களை தீர்க்க பட்ஜெடில் திட்டமோ, நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை.
கரும்பு விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளில்..
* 2021-22 பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.195 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளதை வரவேற்கி றோம். ஆனால் கடந்த ஆண்டு ரூ.192.50 ஊக்கத் தொகையாக வழங்கப் பட்டது. இந்த ஆண்டுக்கு ரூ.2.50 மட்டுமே உயர்த்தப் பட்டுள்ளது. ஒன்றிய அரசு விலையை யும் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2950 விலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஏபி விலையை வழங்குக
கடந்த ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு முப்பது ஆண்டுகளாக தமிழ கத்தில் அமலில் இருந்த மாநில அரசின் பரிந்துரை விலையை (எஸ்ஏபி) அறி வித்து வழங்கிட வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்காதது ஏமாற்றம் அளிக்கி றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வழங்கி வரு கிறார்கள். எனவே தமிழக அரசு வரு வாய் பங்கீட்டு முறை சட்டத்தை நடப்பு கூட்டத் தொடரிலேயே ரத்து செய்து விட்டு மாநில அரசின் பரிந் துரை விலையை அறிவித்து வழங்கிட வேண்டும்.
மற்ற ஆலைகளை திறந்திடுக
என்.பி.கே.ஆர். கூட்டு றவு சர்க்கரை ஆலையை திறந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு ஆய்வுக்குழுவும் அமை க்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கப் பட்டுள்ளதை வரவேற்கி றோம். அதே நேரத்தில் மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளையும் வரும் ஆண்டில் திறந்து செயல்படுத்த மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளை மேம்படுத்த வேண்டும். தரணி, அம்பிகா, ஆரூ ரான், அருணாசலம் ஆகிய தனியார் சர்க்கரை ஆலை கள் கடன் தீர்ப்பாயத்திற்கு சென்று விவசாயிகளுக்கு ரூ.750 கோடிக்கு மேல் கரும்பு பண பாக்கியை பெற்றுத்தரவும்.. தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய எஸ்ஏபி பாக்கி ரூ.1217 கோடியை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்ச் 24 அன்று காலை 10 மணி அள வில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கரும்பு விவசாயிகள் அதிக அளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.