கள ஆய்வு செய்த “மனிதம்” அமைப்பு வலியுறுத்தல்
கோயம்புத்தூர், ஜன.9- ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு குறித்த கள ஆய்வு அறிக்கையை மனிதம் அமைப்பு கோவையில் வெளியிட்டது. உயர்நீதி மன்ற கண்காணிப்பில் விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்குசென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவின் அறிக்கையை கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் வெளியிடப்பட்டது. மனிதம் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ் அறிக் கையினை வெளியிட்டார். இதனை சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் கோவை மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மனிதம் அமைப் பின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பொன் குமார், ராமர், மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஆய்வு செய்து அரசு, காவல்துறை ஆகியோருக்கு இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. ஈஷா யோகா மையத்தின் பல்வேறு அத்துமீறல் களுக்கு எதிராக தொடர்ந்து சிபிஎம் போராடி வருகின்றது. ஈஷாவின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது. சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவினர் சென்ற போது, காவல் துறை விளக்கம் சொல்ல வில்லை. ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கேட்டால் பதில் சொல்ல வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஆனால், அங்குள்ள டிஎஸ்பி இவ்விவ காரத்தில் உங்களுக்கு பதில் அளிக்க முடி யாது எனவும், பதில் அளிக்க வேண்டிய அவ சியம் என்ன என்றும் கேட்டுள்ளார். இவ்விவகாரத்தில் கோவை காவல்துறை யின் விசாரணை திருப்தி அளிக்க வில்லை. மாவட்ட காவல்துறை விசாரணை போதுமான தாக இருக்காது. பிரதமர், பாஜக தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் என பலர் ஈஷா மையம் வந்து செல்லும் நிலையில், தற்போது உள்ள காவல்துறையினர் மூலம் முழுமையான உண்மையான விசாரணை நடைபெறாது என கருதுகிறோம். ஆகவே, சிறப்புக் குழு அமைத்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப் பில் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து மனிதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு கூறு கையில், ஏழுபேர் கொண்ட குழு, மூன்று நாட் கள் சுபஸ்ரீ மர்ம மரணம் குறித்து சம்பந்தப் பட்ட இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. போதை பொருள் நடமாட்டம் இருக்கின்றது, மர்மமான விடயங்கள் இருக் கின்றது. இறந்த சுபஸ்ரீ குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பில்லை. கொலை செய் யப்பட்டு இருக்கவே வாய்ப்பு அதிகம். பெண் ணின் குடும்பத்தினர் அனைவரும் இத னையே தெரிவித்துள்ளனர். ஈஷா மைய பயிற்சி உடையுடன் அவர் வெளிவந்ததை பார்க்கும் போது, அவர் உயிர் பயத்துடன் வந்தது போல இருக்கின்றது.
ஈஷா மைய கட்டுப்பாட்டு மயானத்தில் உடல் எரிப்பு ஏன்?
சுபஸ்ரீயின் அம்மா,அண்ணன் ஆகியோ ரிடம் பிரேதப் பரிசோதனை நாளை என சொல்லி விட்டு, கணவர் பழனிக்குமாரை மட்டும் காவல்துறையினர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உடனே பிரேதப்பரி சோதனை செய்து அவர்கள் குடும்ப வழக்கத் திற்கு மாறாக எரித்துள்ளனர். அதுவும், ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மயா னத்தில் எரியூட்டப்பட்டுள்ளது. கோவை காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. டி.எஸ்.பி இந்த விவகாரம் குறித்து எங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கின்றார்.
சுபஸ்ரீ உடலை எரிக்க கட்டளை எங்கிருந்து வந்தது? சுபஸ்ரீ ஈஷாவில் எதையாவது பார்த்து பயந்து இருக்க வேண்டும். இந்த வழக்கை கோவை காவல்துறை விசாரிக்கக் கூடாது. இப்போது இருக்கும் டி.எஸ்.பி, எஸ்.ஐ விசா ரிக்கக் கூடாது. சுபஸ்ரீ மர்ம மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற குழுவின் நேரடி கண்காணிப்பில் இந்த சிறப்பு புலனாய்வு குழு இருக்க வேண்டும். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும்.
டிஎஸ்பி-யை இடமாற்ற வேண்டும்
இந்த வழக்கை விசாரிக்கும் ராஜபாண்டி என்ற டிஎஸ்பி யை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் இந்த வழக்கில் தலையிடக் கூடாது. மேலும் விசாரணை முடியும் வரை ஈஷா மையத்தை பூட்டி சீல் வைக்க வேண் டும், சுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவா ரணம் வழங்க வேண்டும். ஈஷா மீது தைரி யமாக கை வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக இல்லை. உயர்நீதி மன்றத்தின் கண் காணிப்பில் குழுவை அமைத்து அந்த குழு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்த அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்தகட்டமாக நீதிமன்றம் செல்வதை பற்றி யோசிப்போம் என்றார்.