tamilnadu

img

தமிழ் மீனவர்கள் மீது குரூரமான தாக்குதல்: உரிய விசாரணை நடத்துக! இழப்பீடு வழங்கிடுக!!

மதுரை,அக்.22- தமிழ் மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய குரூரமான தாக்குதல் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மீனவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாக் ஜலசந்தி அருகே தமிழ் மீன வர்கள் மீது இந்தியக் கப்பற்படை நடத்தி யுள்ள துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியை தரு கிறது.  கடந்த காலங்களில் இலங்கை கடற்  படை தாக்குதல் தொடுத்த சம்பவங்கள் பலவற்றை ஒன்றிய அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்த முறை இந்திய கடற்படையே குரூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு இருப் பது வேதனைக்குரியது ஆகும்.  தற்போது துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட 30 வயதான மயிலாடுதுறை வானகிரி மீனவர்  வீரவேல் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  அவர் வயிற்றிலும், தொடைகளி லும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. வயிற்றில் நான்கு பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளன. 

ஆதார் கார்டை காட்டிய பிறகும் கடற்படை தாக்குதல் 

அந்த படகில் வந்த மற்ற மீனவர்கள் ஊடகப் பேட்டிகளில், நாங்கள் படகை நிறுத்திய பிறகும், எங்கள் ஆதார் கார்டு களை காட்டிய பிறகும் கடற்படையினர் எங்கள் கைகளை கட்டி இரும்புக் கம்பி களால் தாக்கினர் என்று கூறியுள்ளார்கள்.  இது தமிழக மீனவர்கள் மனதில் பெரும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கியுள்ளது. உட னடியாக நம்பிக்கை தரும் நடவடிக்கை கள் அரசின் தரப்பில் தேவைப்படுகிறது.  தமிழக மீனவர் மீதான தாக்குதல் களுக்கு இந்திய கப்பற்படை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். குற்றம் இழைத்துள்ள கடற்படையினர் மீது விரைவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கேரள மீனவர் இருவர் இத்தாலி கப்பல்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு ரூ. 10 கோடி இழப்பீடு இத்தாலி அரசால் வழங்கப்பட்டதை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு  வருகிறேன். 2012 இல் நடைபெற்ற அந்த சம்பவம் மீது 9 ஆண்டு சட்டப் போராட்  டம் நடைபெற்று 2021 இல் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்  இறந்த மீனவர்கள் ஒவ்வொருவருக் கும் தலா ரூ.4 கோடி, படகு சொந்தக்கார ருக்கு ரூ. 2 கோடி என இழப்பீடு தரப்பட்டது.  ஒன்றிய அரசும் காயம்பட்ட, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதே  போன்ற இழப்பீட்டை உடனடியாக வழங்கி மீனவர் மத்தியில் நம்பிக்கை யை ஏற்படுத்த வேண்டும். அக்டோபர் 22 அன்று  ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.  விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.