மதுரை, அக்.23- மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த வர் சுதர்சனம் சிவக்குமார். 11 வயது சிறுவ ரான இவர், பனிரெண்டாம் வகுப்பு புத்த கத்தில் உள்ள விலங்குகளின் விலங்கியல் பெயர்களையும், தாவரங்களின் தாவரவியல் பெயர்களையும் ஒரு நிமிடத்திற்குள் கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும், ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு இயற்கணித சூத்திரங்களை ஒரு நிமிடத்திற்குள் மனப் பாடமாக கூறி ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் கிராண்ட் மாஸ்டராக இடம்பிடித்துள்ளார். 50 பல்வேறு துறை களின் தந்தையர் பெயர்களை ஒரு நிமி டத்திற்குள் கூறி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். மாவட்ட மற்றும் மாநில அளவில் கராத்தே போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பல பதக்கங் களை வென்றுள்ளார். தான்வி சிவக்குமார் என்ற ஐந்து வயது சிறுமி, ஒரு நிமிடத்திற்குள் 60 தமிழ் ஆண்டு களின் பெயர்களை கூறி இந்தியன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 206 மனித எலும்புகளின் பெயர் களை 43 வினாடிகளுக்குள் கூறி ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்த கத்தில் இடம் பிடித்துள்ளார். ஆத்திச்சூடி யில் உள்ள 109 வர்க்கங்களையும் மனப்பாடமாக கூறி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாதனை படைத்த சிறுவர்,சிறுமியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தனது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை கூறினார். இருவரது முயற்சி களுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர் சிவக்குமார் மற்றும் உஷா இணை யருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.