மதுரை, ஆக.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனின் கோரிக்கையை ஏற்று, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனத் தேர்வு களில் இந்தி கட்டாயமில்லை என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்க டேசன் எம்.பி.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரி யரல்லாத அலுவலர் நியமனத் தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை 17.08.2023 அன்று வெளி யிட்டது. ராய்ப்பூர், ஜாம்ஷெட் பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ டி கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி ஆகிய நிறு வனங்களில் உள்ள காலி யிடங்களை நிரப்பப்படு வதற்கான அறிவிக்கை அது. இந்தி மொழித் தேர்வு கட்டா யம் ஆக்கப்பட்டிருந்த தும் 20 விழுக்காடு மற்றும் 30 விழுக்காடு மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்ததும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சி அடையவைத்தது. இத்த கைய அநீதிஇந்தி அல்லாத மாநில மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, இந்தித் திணிப்பை கைவிடவேண்டு மென்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதா னுக்கு 23.08.2023 அன்று கடி தம் எழுதி இருந்தேன். கடிதத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. தேர்வு பற்றிய புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தி கட்டாயம் அல்ல, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ள லாம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இது தமிழ்நாட்டு மாண வர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். மொழிப் பன்மைத்து வத்தை பாதுகாப்பதிலும், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.