tamilnadu

img

கோவை சாலைப் பணிகள் : முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கோவை, செப்.24- கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து ஞாயிறன்று முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள படியூரில் நடைபெற்ற திமுக மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.  விமான நிலையத்திலிருந்து கார் மூலம்  சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், விளாங் குறிச்சி பகுதியில் திடீரென சாலைப்பணி கள் குறித்து ஆய்வு செய்தார். கோவை மாநக ராட்சி, 5 ஆவது வார்டுக்குட்பட்ட வி.கே.வி  நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோ  மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இதன்பின், 8 ஆவது வார்டுக்குட்பட்ட துளசி நகரில் ரூ.1.62 கோடி  மதிப்பீட்டில் 2.04 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.  அப்போது, பணிகள் குறித்து அங்கிருந்த  அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும்,  அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை புனரமைப்பு பணிகளை விரைந்து  முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.