மாணவர்கள் ஜெர்மன் பயணம்
மீனம்பாக்கம்: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்விச் சுற்றுலாவுக்காக, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 22 மாணவ-மாணவிகள் விமானம் மூலம், ஒரு வாரம் ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் சனிக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக அந்த மாண வர்கள், “முதல்முறையாக விமானத்தில் பறப்பது மகிழ்ச்சி யாக உள்ளது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பு கடந்த ஏப்.25 அன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி வழங்கிய ஒரு மாதம் கால அவகாசம் சனிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிந்தது. இதுவரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடக்கிறது.
குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை: “தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் அவ்வப்போது மண் சரிவு, வெடி விபத்து உள்ளிட்ட எதிர்பா ராத காரணங்களால் குவாரிகளில் பணியாற்றும் தொழிலா ளர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. குவாரி அனுமதி வழங்கும்போது அரசால் வழங்கப்படுகிற வழிகாட்டு நெறி முறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை முறையாக கடைபிடிக்காததே இதுபோன்ற எதிர்பா ராத விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள குவாரிகளை மாதம்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்” என துணை இயக்குநர்களுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் விபரீத முடிவு
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் இரவு பணி நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தி திணிப்புக்கு கண்டனம்
சென்னை: யுபிஎஸ்சி ஏற்கனவே இந்தி-ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள்களை வழங்கி, பிற மொழி மாண வர்களை ஓரங்கட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை யில் நடந்த யுபிஎஸ்சி தேர்வில், தேர்வு மைய வழிமுறைகள் கூட இந்தியில் இருந்தது. இது இந்தி திணிப்பின் மற்றொரு அத்தியாயமா என்று கேள்வி எழுப்பியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசிகாந்த் செந்தில், இதற்கு கடும் கண்ட னம் தெரிவித்திருக்கிறார்.
கோவையில் 5 வீடுகள் சேதம்
கோவை: கோவையில் பெய்து வரும் கனமழை காரண மாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் முடி வெடுப்பார் என்று அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்
ரூ.9.60 லட்சம் அபராதம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.9.60 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு கடலோர ஒழுங்கு முறை மண்டல ஆணையம் உத்தரவிட்டது. இசிஆர் சாலை யில் உள்ள ஒடியூர் குளத்தில் விதிகளை மீறி, மண் கொட்டிய தாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலப் பணிகளின்போது கட லோர மண்டல விதிகளை மீறி மண்ணை கொட்டி வைத்த தாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த செங்கல்பட்டு ஆட்சிய ரின் புகார் அடிப்படையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளியங்கிரி மலையேற தடை
கோவை: கோவை மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெள்ளியங்கிரி மலை யேற 2 நாட்கள் வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: மே 28-இல் தீர்ப்பு
சென்னை, மே 25 - அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மே 28 அன்று சென்னை மக ளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக் காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட் டார். விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்க ளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த குணால் சேட், பொள்ளாச்சியைச் சேர்ந்த முரளிதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் மீது சென்னை, செங்கல் பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலை யங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சிறப்புப் புலனாய்வு அமைப்பால் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசா ரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 13 சாட்சி களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்புப் புல னாய்வுக் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த னர். இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம் மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக் கிறது.
உதகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
உதகை: கப்பத்தொரை ஆற்று தண்ணீர் கரை யோரங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்தது. இதனால், பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கேரட், பீட்ரூட் மலைக்காய்கறிகள் வெள்ள நீரில் மூழ்கின. 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும் நீரில் மூழ்கின.
வைகை அணையில் ஆய்வு
மதுரை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருக்கிறது. இதனால், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.