பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த மாணவர்கள் இடைநீக்கம்
இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
சென்னை, மே 27 - ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக “Free Palastine” என சுவரில் எழுதிய மாண வர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ. அர விந்த சாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD) சமூக பணித்துறையில் MSW இரண் டாம் ஆண்டு படிக்கும் ஏழு மாண வர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விடு தியை விட்டும் வெளியேற்றியுள்ளது. விடுதி சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தியதற்காகவும், தேச விரோதச் செயல்களில் ஈடுபட்ட தற்காகவும், அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறியிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி யில், இஸ்ரேல் மனிதகுல விரோதத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. குழந்தைகள், பெண்கள் என பாரபட்சமின்றி பாலஸ்தீன மக்களை நர வேட்டை யாடிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட, உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இத்தகைய கொடு பாதகச் செயலை கண்டித்து வரு கின்றன. அறிவார்ந்த மற்றும் மனிதா பிமானம் மிக்க ஒவ்வொருவரும் பாலஸ்தீனத்திற்கு துணை நிற்க வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாலஸ் தீனத்திற்கு ஆதரவாக ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம் பாட்டு நிறுவனத்தில் படிக்கும் மாண வர்கள் சுவற்றில் “Free Palastine” என எழுதி, தங்களது ஆதரவை தெரி வித்துள்ளனர். இத்தகைய சூழலில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை தேச விரோதச் செயல் என கூறுவதற்கு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன (RGNIYD) நிர்வாகத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதாகும். மேலும் இந்த நடவடிக்கைகள் முற்றிலும் நியா யமற்ற மற்றும் கல்வி வளாக ஜன நாயக உரிமைக்கு எதிரானது. இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாண வர்கள் முந்தைய நாட்களில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி யுள்ளனர். இந்நிலையில் நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகத் தெரிகிறது. மாண வர்களுக்கு இடைநீக்கம் தொ டர்பான அறிவிப்பு, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தெரி விக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் மாணவர்களுக்கு தேர்வு நாளா கும். பழைய பிரச்சனைகளை மன தில் வைத்து, மாணவர்களை தேர்வெ ழுத விடாமல் பழிவாங்கி இருக் கிறது நிர்வாகம். மாணவர்களை தேர்வெழுத விடாமல் நய வஞ்சகமாக செயல்ப டும் ஒரு கல்வி நிறுவனம், எப்படி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாகவும், மாணவர்கள் நலனை சார்ந்து இயங் கும் நிர்வாகமாகவும் இருக்க முடி யும்? இப்படியான பழிவாங்கும் நடவ டிக்கைகள், ஒரு சிறப்புமிக்க கல்வி நிறுவனத்திற்கு எதிரான அவ மானகரமான செயல் என்பதை இந்திய மாணவர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. மாணவர்களின் உரிமைக் குரலை பறிக்காமல், அவர்களின் நலன் கருதி இடைநீக்கத்தை கல்வி நிறுவனம் ரத்து செய்ய வேண்டும். மேலும் நிர்வாகம் இதுபோன்ற அநியாய நடவடிக்கைகளில் இருந்து விலகி, மாணவர்களை ஜன நாயக முறையில் சுதந்திரமாக செயல் பட விட வேண்டும் என இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.