tamilnadu

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் போலந்தில் படிக்க விருப்பம்

சென்னை, மார்ச் 10- உக்ரைனில் இருந்து வந்த மாண வர்கள் போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த 1,456 மாணவர்களுக்கு 20 மனநல ஆலோ சகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப் படுகிறது. புதன்கிழமை ஒரே நாளில் 753 பேரை தொடர்பு கொண்டதில் 375 மாணவர்கள் நேரடியாக உரையாற்றி உள்ளார்கள். மேலும் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்து போன்ற நாடு களில் படிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம், அதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.