tamilnadu

img

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு வாபஸ்

தூத்துக்குடி, மார்ச் 23- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களின் உயர்வு ரத்து செய்யபட்டதை தொட ர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் 100க்கும் மேற்பட்ட அரசு கலை-அறி வியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணம், விண்ணப்ப கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், முனைவர் பட்ட சான்றிதழ் கட்டணம், செய்முறை தேர்வு கட்டணம் உள்ளிட்ட 56 வகையான பிரிவுகளில் கட்ட ணங்களை உயர்த்தி மார்ச் 10ஆம் தேதி  அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ச்சி யாக ஆண்டுக்கு ஆண்டு தேர்வு கட்ட ணத்தை உயர்த்தி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். தாளின் விலை ஏற்றம் என்று காரணம் காட்டி மதிப்பெண் சான்றிதழ் கட்டணத்தை யும் பன்மடங்கு உயர்த்திய‌து. அதன்படி தேர்வு கட்டணம் பேப்பர் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.100-லிருந்து 140-ஆகவும், முதுகலை மாண வர்களுக்கு ரூ.160-லிருந்து 220 ஆகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.500- லிருந்து 750-ஆகவும் தேர்வு கட்ட ணத்தை உயர்த்தி உள்ளார்கள். மன்னிப்பு கட்டணம் ரூ.1000 லிருந்து 1500  ஆகவும், தடையில்லா சாண்று வாங்கு வதற்கு ரூ. 5000 லிருந்து 10,000 ஆக‌ உயர்ந்துள்ளது.

மேலும் பட்டமளிப்பிற்கு  ரூ.500-லிருந்து 800-ஆகவும், செய்முறை, விவாதம், ஆய்வுக்கட்டுரை இது போன்ற 56 வகையான கட்டணங்களை  உயர்த்தியுள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட நான்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் மாணவர்கள் கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போன்ற போராட்டங் களை தொடர்ச்சியாக நடத்தியதாலும், உயர்கல்வித்துறை அறிவிப்பின் படியும்  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் உயர்த்திய தேர்வு கட்ட ணத்தை வாபஸ் பெற்றது.. இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி. கல்லூரி அருகில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ரா.கார்த்திக் தலைமையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில்  மாவட்ட குழு உறுப்பினர் மாதவன், பிரகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் வேல்சூர்யா, வெனிஸ்ட், ஆனந்த், சுரேஷ் மற்றும் மாணவர்கள் பலர் உடன் இருந்தனர்.