தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்!
ஆர்டிஇ ஒதுக்கீட்டிற்கு வரவேண்டிய 25 சதவிகித இடங்கள்
சென்னை, ஜூன் 7 - கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான- 25 சதவிகித இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடை பெறுவதற்கு, தனியார் பள்ளி நிர்வாகங் களோடு, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. பள்ளிகள் திறந்தும் தீர்க்கப்படாத பிரச்சனை இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி ஏழை, எளிய மாணவர் களுக்கான 25 சதவிகித இட ஒதுக் கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப் பம் செய்துள்ளனர். ஆனால், தனி யார் நிர்வாகங்கள் தங்களுக்கு சேர வேண்டிய தொகை நிலுவையாக உள்ள காரணத்தை முன்னிறுத்தி ஆர்டிஇ (RTE)-யின் படி 25 சத விகித இட ஒதுக் கீடு அளிக்காமல் மாணவர் சேர்க் கையை மறுத்து வருகின்றன. பள்ளிகள் திறந்து ஒருவாரம் ஆன பின்பும் இப்பிரச்சனை தீர்க்கப் படவில்லை. 7 லட்சம் பேரின் கல்வியை பறிக்கும் மோடி அரசு சமக்ரா சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2,152 கோடி நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தையே முடமாக்கும் வகையில் இச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதி யையும் மாநிலங்களுக்கு வழங்காமல் ஏழை- எளிய மாணவர்களின் கல்வி நலனில் ஒன்றிய பாஜக அரசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. நிதி நெருக்கடி காரணமாக தமிழ கத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டாக வேண்டும் இருப்பினும், ஒன்றிய அரசிட மிருந்து நிதி தாமதமாவதைக் காரணம் காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கை யை மறுப்பது நியாயமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தமிழக அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கான முயற்சியை மேற் கொள்ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேசி கட்டா யக் கல்வி உரிமைச் சட்டப்படி மாண வர்கள் சேர்க்கைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.