வாழ்க்கை நடத்த முறையான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், 30 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமையல் எரிவாயுவிற்கான முழுத்தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.19 அன்று சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையொட்டி சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை தலைமை செயலகத்தில் சந்தித்து சங்கத்தின் தலைவர் ஆர்.கலா, பொதுச் செயலாளர் அ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி, துணைத்தலைவர் பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி ஆகியோர் மனு அளித்தனர்.