tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு வி.தொ.ச மனு கொடுக்கும் போராட்டம்

தென்காசி ,மார்ச் 25- தென்காசி மாவட்டம் ஆலங் குளம் ஒன்றியம் நெட்டூர் கிராம மக்கள், 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக ஆலங்குளம் ஒன்றிய அலு வலகத்தில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சசி கலா, நெட்டூர் கிளைச் செயலாளர் லட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றி யக்குழு உறுப்பினர் வெற்றிவேல், ராமர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் 15 தினங்களுக்குள் அனை வருக்கும் வேலை கொடுப்போம், கொடுத்த மனு வுக்கு உடனடியாக ரசீது கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் மக்கள் மனுக்களை கொடுத்து கலைந்து சென்றனர். இதில்  100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர் கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.