பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்துக!
மாதர் சங்க மாநாடு கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, ஜுன் 21- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17 ஆவது நகர மாநாடு, தியாகி சிவராமன் நினைவிடத்தில் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்திடு, அத்தியாவாசிய பொருட்களை ரேஷன் கடையில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகர தலைவர் கே.ராதா தலைமையில் மாநாடு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தலைவர் எஸ்.பவானி, ஒன்றியச் செயலாளர் ஜி. கலைச்செல்வி, நகரச் செயலாளர் என். கோதாவரி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக என்.கோதாவரி, செயலாளராக என்.வெண்ணிலா, பொருளாளராக ஏ.சுதா ஆகியோர் உட்பட 11 நகர குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.