tamilnadu

img

வன்முறையில் முடிந்த பாமக போராட்டம் : நெய்வேலியில் கல்வீச்சு - மண்டை உடைப்பு

கடலூர், ஜூலை 28- நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. நெய்வேலியில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா தனது இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக, கத்தாழை, கரவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளைய மாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங் களில் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால், இழப் பீடு முழுமையாக வழங்கவில்லை.  அதற்குள் வளையமாதேவி கிராமத்தில் கையகப்படுத்திய நிலங்க ளில் வாய்க்கால் வெட்டும் பணியை 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் இயந்திரங்கள் மூலம் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மேற் கொண்டனர். அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கைக்கு விவசாயி கள் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தன. பல்வேறு இடங்களில் பொது மக்களே திரண்டு போராட்டங்களை நடத்தினர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்க ளில் கடந்த இரண்டு தினங்களாக அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.  

இந்நிலையில், என்எல்சி நிறுவனம்  விவசாய நிலங்களை கையகப்படுத்து வதை கண்டித்து பாமக சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28)  நெய்வேலி என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி போராட்டம் நடத்துவதற்கு சென்ற போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸை போலீசார் தடுத்து கைது செய்தனர்.  அப்போது போராட்டத்திற்கு வந்திருந்த பாமகவினர் காவல்துறை யினர் மீது தண்ணீர் பாட்டில்கள்,  கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில்  போலீசார் 4 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தண்ணீரை பீச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரை கலைத்தனர். பாமக போராட்டம் காரணமாக கடலூர், நெய்வேலி மார்க்கத்தில் தொலை தூர பேருந்துகள் இயக்கம் நிறுத்தப் பட்டது. போலீசாரால் கைது செய்யப் பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாமக தலைவர் அன்புமணி மாலையில் விடுவிக்கப் பட்டார்.