tamilnadu

img

அரசு ஊழியர்கள் ஆதரவு மறியல்

பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.மத்திய அரசு ஊழியர் மகாசம்மேனத்தின் அறைகூவல்படி அரசுஅலுவலகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரன்பாடுகளை களையவேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக செவ்வாயன்று (மார்ச் 29) புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி அண்ணாசிலை எதிரே நடைபெற்ற வேலைநிறுத்த  மறியல்போராட்டத்திற்கு அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,ஆலோசகர் பிரேமதாசன், பொருளாளர் கிறிஸ்டோபர், நிர்வாகிகள் வின்சென்ட்ராஜ், ஆனந்தகணபதி, சிவஞானம்,சேகர், முனுசாமி உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள். முன்னதாக கம்பன் கலையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.