tamilnadu

img

‘ஸ்மார்ட் மீட்டரை’ தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்!

சென்னை, நவ. 30 - ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்ற கோரி க்கையை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் வேகமெடுத்துள்ளது. இதனொரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலு வலக சமூக ஊடக கிளை சார்பில் அனுப்பப் படும் கடிதத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டார்.  நாடு முழுவதும் மின்சார வாரியத்தை  தனியார் வசம் ஒப்படைக்கும் சதிவேலை யின் ஒருபகுதியாக, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் ஏற்று அமல்படுத்த வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் அளித்து வருகிறது. 2025 டிசம்பர் 31-க்குள் இந்தியா முழு வதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென தேதியும் குறித்துள்ளது. ஸ்மார்ட் மீட்ட ருக்கான கட்டணமும் தனியாக மக்கள் மீதே சுமத்தப்பட உள்ளது.  

இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும் என்ப தால், முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டு களைப் பெற்றவர்கள் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.  அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட் மீட்டரானது, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணத்தைப் பிடித்துக் கொள்ளும். அதேபோல காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதா ரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் வகையிலும், இரவு  10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூ லிக்கும் முறையிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.  செல்போன் நிறுவனங்களைப் போலவே, நுகர்வோர், எந்த மின்சார நிறுவனம் வேண்டுமென்று நினைக் கிறாரோ, அந்த மின் நிறுவனத்திட மிருந்து மின்சாரத்தை பெற்று பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கூறுவ தால், இதன் மூலம் அரசுக் கட்டுப்பாட்டி லுள்ள மின்சார வாரியங்களுக்கு மூடு  விழா நடத்தப்பட்டு, அவை தனியாருக்கு வழங்கப்பட இருப்பதும் தெளிவாகிறது. அவ்வாறு தனியார்மயமாகும்போது, வீடுகளுக்கான 100 யூனிட்  இலவச மின்சாரம், விவசாயம், நெசவுத் தொழி லுக்கான இலவச மின்சாரம், சிறு தொழிற் சாலைகளுக்கு கிடைக்கும் சலுகை களோ கிடைக்காமல் போகும். மின்சார வாரியத்தை கலைத்து தனி யார் வசம் மின் விநியோகத்தை ஒப்படை க்கும் நோக்கங்களோடு இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

இதி லுள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தமாட் டோம்; இதனால், ஒன்றிய அரசின் நிதி  கிடைக்காமல் ஏற்படும் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பை பிறவழிகளில் சரிக்கட்டு வோம் என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிராகரிக்க வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழு வதும் வீடு வீடாக மக்களைச் சந்தித்து கையெழுத்துப் பெற்று அரசுக்கு அனுப்பி வைப்பதுடன், மக்களைத் திரட்டி அந்தந்த மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லாயிரக்கணக்கான கிளைகள் இந்த இயக்கத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலக சமூக ஊடக  கிளை சார்பில் அனுப்பப்படும் கடிதத்தில் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கையெழுத்திட்டார். மாநி லக்குழு உறுப்பினர் சுதிர், கிளைச் செயலாளர் நர்மதா தேவி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.