tamilnadu

img

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர்கள் நிலைக் குழு கூட்டம்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர்கள் நிலைக் குழு கூட்டம்

சென்னை, மே 24 - மாநில அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தலைவர்கள் இரண்டு நாட்கள் நடை பெறும் நிலைக்குழு கூட்டம் சனிக்கிழமை (மே 24) சென்னை சேப்பாக்கம் புதிய அரசி னர் விருந்தினர் மாளிகையில் தொடங்கி யது. கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின் தலைவர் அஜய் குமார்  தொடங்கி வைத்தார்.

கூட்டத்தின் நோக்கம்

இந்த கூட்டம் பல முக்கிய அம்சங் களைப் பற்றி விவாதிக்கும் அமைப்பாக செயல்படுகிறது: அரசுத் துறை பணியா ளர்களை தேர்வு செய்யும் செயல்முறை களில் நேர்மையான, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது, சிறந்த நடை முறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள் வது, தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, தேர்வுத் தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது. இக்கூட்டத்தில் நிலைக் குழுவின் தேர்வா ணையத்தின் தலைவர் அலோக் வர்மா, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம்,  பீகார், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகா ராஷ்டிரா, நாகலாந்து, ராஜஸ்தான் மற்றும்  உத்தரப் பிரதேசம் மாநில அரசுப் பணி யாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.