tamilnadu

img

மக்களாட்சி மாண்புகளை ஆளுநர் சீர்குலைக்கிறார்

சென்னை, ஏப். 23- ஆளுநர் மக்களாட்சி மாண்புகளை சீர்குலைக்கிறார் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் சனிக்கிழமை (ஏப்.23) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் உரையாற்றும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருப்பது வியப்பை அளிக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு பதவி சார்ந்தது, தனி நபர் சார்ந்ததல்ல. ஆளுநராக இருப்பதால் அவர் வேந்தராக பொறுப்பு வகிக்கிறார். மாநிலத்தின் கொள்கை முடிவு மாநில அமைச்சரவையில்தான் உருவாகும். ஆளுநர் தன் சொந்த விருப்பத்தை மாநில  மக்கள் மீது திணிக்க முடியாது. மாநிலத்தின்  வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவது  மாநில அரசின் பணியாகும். மாநில அரசு  பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரி யர்கள், இணைப் பேராசிரியர்களுக்கு நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்று  தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வகுப்பு நடத்த முடியாது.

மேலும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு இணை வேந்தராக  பொறுப்பு வகிக்கும் மாநில உயர்கல்வி அமைச்சர் பங்கேற்பு இல்லாமல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பது தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகரான அதிகார  மையமாக ஆளுநர் மாளிகை செயல்படு வதின் வெளிப்பாடாகும். ஆளுநர் தன்  விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட  இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை. மாநிலப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்யும் ஆளுநர் மாளிகையின் எதேச்சாதிகார செயல்பாடானது, பல்கலைக் கழகங்களை உருவாக்கி நிர்வகிக்கும் மாநில அரசின் அதிகாரத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலா கும். பொறுப்பின் வரம்பை மீறி செயல்படு வதன் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி மக்களவை ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீட அதிக அதிகாரத்தை தான் பெற்றி ருப்பது போல் ஆளுநர் நடந்து கொள்கிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இரட்டை ஆட்சி  முறையை மாநிலத்தில் மீண்டும் நிறுவ ஆளுநர் முயற்சிக்கிறார். ஆளுநர் மாளிகை விடுத்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு அழைப்பை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். ஆளுநர்? கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து  செயல்பட  மறுத்தால், ஆளுநர் மாளிகை விடுத்துள்ள மாநாடு அழைப்பை பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நிராகரிக்க வேண்டும். மாநில மக்களின் தேவைகளுக்கேற்ப மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க  மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில் தேசியக் கல்விக் கொள் கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சுற்றறிக்கைகளை பல்கலைக்கழக மானியக்  குழு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.