tamilnadu

img

மாநில வாள்சண்டை போட்டி

மாநில வாள்சண்டை போட்டி

நாகர்கோவில், அக். 27- தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகம் மற்றும் கன்னியா குமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழகம் சார்பில் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் சண்டைப் போட்டி(FENCING) ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள்விளையாட்டுக் கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.   மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார் தலைமை வகித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்புரையாற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுபீர் ஜெபசிங், முன்னாள் குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.