தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநில மாநாடு ஜூன் மாதம் 19 முதல் 21ஆம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளது. அதற்கான மாநாட்டு இலச்சினையை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திங்களன்று (ஏப்.25) சென்னையில் வெளியிட்டார். உடன் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.தயானந்தம், எம்.கனகசுந்தர், டி.ஜான்சன் கென்னடி, துணைத் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.