tamilnadu

img

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் வீடுகளை பூட்டி வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக!

தஞ்சாவூர், நவ.20 -  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம், சனிக்கிழமை தஞ்சா வூரில் மாநிலத் தலைவர் வ.செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநிலப் பொருளாளர் எஸ்.துரைராஜ் உள்ளி ட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை, குத்தகைத் தொகையை குறைக்க வேண்டும். புதிய வாடகையை நிர்ணயம் செய்ய, தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட வாடகை நிர்ணயக் குழுவின் பரிந்துரை களை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும். நீண்ட காலமாக கோயில் இடங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்க, கடந்த ஆட்சியில் வெளி யிடப்பட்ட அரசாணை 318-ஐ உடனே  செயல்படுத்த வேண்டும். பல தலைமுறை யாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளை, நிலத்தை விட்டு வெளியேற்ற அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அறநிலையத்துறை சட்டம் 34-ன் படி, பல தலைமுறைகளாக நிலத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு மட்டும், நியாயமான விலையை தீர்மானித்து, அதை பயனாளிகளிடம் தவணையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே சொந்தமாக்கி  தர வேண்டும். அறநிலையத் துறையில் புதிதாக, வருவாய்த்துறை அதிகாரிகளை பல மட்டங்களில் நியமனம் செய்துள்ளதை ரத்து செய்திட வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  முன்னதாக மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.ராம் நன்றி கூறினார்.