மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கிய பாஜக அரசை கண்டித்தும், பாலியல் வன்முறைகளை தடுக்க கோரியும் செவ்வாயன்று (ஜூலை 25) சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்த் சாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் கு.தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.