திருவனந்தபுரம், ஏப்.2- கேரள என்ஜிஒ யூனியன் 58-ஆவது மாநில மாநாடு 2022 ஏப்ரல் 2 அன்று காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் துவங்கியது. மாநிலத் தலைவர் இ.பிரேம்குமார் கொடி யேற்றிவைத்தார். அனைத்து மாவட்டங்களி லும் உள்ள யூனியனின் 15,5873 உறுப்பினர்க ளின் சார்பாக மொத்தம் 896 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாநில செயலாளர் ஆர்.ஸாஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் என்.நிமல்ராஜ் வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். கேரள சர்வீஸ் மாத இதழின் வரவு-செலவு அறிக்கையை அதன் மேலாளர் ஷீஜா முன்வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் தோழர்கள் கே.என்.பிஜிமோள் (காசர்கோடு), பி.பி.சயதோஷ்குமார் (கண்ணூர்), எம்.கே.மனோஜ் (வயநாடு), டி.ஸஜித்குமார் (கோழிக்கோடு), கே.வேதவியாசன் (மலப் புறம்), பி.ராஜேஷ்(பாலக்காடு), டி.என்.ஸிஜுமோன் (திருச்சூர்), டி.பி.திபின் (எர்ணா குளம்), கே.எ.பியது (இடுக்கி), வி.சி.அஜித் (கோட்டயம்), டி.கே.மதுபால் (ஆலப்புழா), பி.ஷாஜு (பத்தனம்திட்டா), ஜே.ரதீஷ்குமார் (கொல்லம்), ஏ.ஷாஜகான் (திருவனந்தபுரம் வடக்கு), கே.மகேஸ்வரன் நாயர் (திரு வனந்தபுரம் தெற்கு) ஆகியோர் பங்கெடுத்த னர். தொடர்ந்து யூனியன் பொதுச் செயலா ளர் எம்.ஏ.அஜித்குமார் விவாதங்களுக்கு பதிலுரை வழங்கினார்.