tamilnadu

img

மருத்துவம் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சென்னை,பிப்.14- எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களை, மூத்த மாணவர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தா ய்வு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி யது. இந்த ஆண்டு சிறப்பு பிரிவை தவிர பொது கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 17 சுயநிதி கல்லூரிகள், 2  அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 19 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6,639 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நடந்த முதல் கட்ட கலந்தாய்வில் 6,043 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரி யில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவு ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்றது. 596 இடங்கள் காலி யாக உள்ளன. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கல்லூரி களில் சேர்வதற்கு ஒதுக்கீடு கடிதம் பெற்ற மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில்அரசு கல்வி கட்டணத்தை செலுத்தி சேர்ந்த வர்களுக்கு திங்கள்(பிப்.14) முதல் வகுப்புகள் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலதாமதமாக வகுப்புகள் தொடங்கி உள்ளது. 6,043 மருத்துவ மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்தனர். புதிய மாணவர் களை வரவே ற்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளும் செய்திருந்தன. மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை மலர்கள் கொடுத்து வரவேற்றனர். புதிதாக கல்லூ ரிக்கு வந்த மாணவ- மாணவிகள் ஒருவித பதற்றத்தில் இருந்தாலும் கூட அவர்களை கல்லூரி முதல்வர்கள் அன்போடு வரவேற்று இருக்கைகளில் அமர வைத்தனர். சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்து வக்கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்தனர். கல்லூரி முதல்வர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் மாணவர்களை முதலில் ஒரு கூட்டரங்கில் அமர வைத்து கல்லூரியில் எப்படி செயல்பட வேண்டும்? விடுதியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவமனை மற்றும் விடுதி களில் பின்பற்றுவது குறித்து அறிவுறுத் ்தப்பட்டது. மேலும் கல்லூரிகளுக்கு புதிதாக வந்துள்ள மாணவர்களை ‘ரேக்கிங்’ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்கள் எச்சரித்தனர். ரேக்கிங் குறித்து புகார் பெட்டிகளும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.