ஈரோடு, பிப். 23- ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகக் களம் காணாமல் தானாக எல்லாம் மாறும் என்பது மூடத்தனம். மனிதனை மனிதன் மதிக்கக்கூடிய, மகத்தான சிந்தனை உள்ள மாநிலமாக மாற்றுகிற பெரும் பணியி்ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஈடுபடுவதாக தியாகி லட்சுமண அய்யர் பிறந்தநாள் கருத்தரங்கில் அதன் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறினார். சுதந்திரப் போராட்டத் தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யரின் 107 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம், சிறப்பு மலர் வெளியீட்டு விழா கோபிசெட்டி பாளையம் தக்கர்பாபா வித்யாலயா பள்ளி யில் நடைபெற்றது. நிகழ்விற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை தலைமை ஏற்றார். செயலாளர் கே.சி.ரங்கசாமி வரவேற்றார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், சிறப்பு மலரை வெளியிட்டு கருத்துரையாற்றினார். அப்போது, கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், கல்வி பரவி வந்த காலத்தில் அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற பணிகளை செய்தவர் தியாகி லட்சுமண அய்யர். பல சமூகங் களில் முதல் தலைமுறை பட்டதாரி கள் இப்போதுதான் உருவாகிக் கொண்டி ருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாள் தூய்மைப் பணியில் ஈடு படுத்தப்பட்ட சமூகம் இன்றுவரை அதிலிருந்து விடுபட முடியவில்லை என்பது நம்முன் உள்ள கேள்வி. புதிரை வண்ணார், மலை குறவர்கள், வனங்களில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் இவர்களெல்லாம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லா வளங்களையும் பெற முடிகிறதா என்பது நம் மனச்சாட்சி முன் உள்ள கேள்வி. சாதிச் சான்று கூட பெற முடிய வில்லை என்பதே உண்மை.
சமீபத்தில், இச்சமூகத்தை சேர்ந்த வர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆளுக்கொரு பாம்பை பிடித்து தோளில் துண்டைப் போல போட்டுச்சென்றார்கள். வட்டாட்சியர் எழுந்து நின்று கையெழுத்து போட்டுச் சாதிச் சான்றிதழ் கொடுத்தார். இப்படித்தான் சமூகம் தேங்கிக் கிடக்கிறது. லட்சுமண அய்யர் நினைவு கூரப்படு வதன் நோக்கம் என்னவென்றால், மனி தனாக வாழ்வதற்கு சில அறங்கள், கோட்பாடுகள் வேண்டும். எளிமையை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்த காந்தியைப் போல லட்சுமண அய்யரும் ஒரு செய்தியை நமக்கு போதித்துக் கொண்டே இருக்கிறார். இவரைப் போன்ற தன்னமில்லா தலைவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் போதித்தவற்றில் இன்னும் நிறைவேறாத கடமைகளை எப்படி நிறை வேற்றப் போகிறோம் என்பதுதான் நமக் கான செய்தி என்று பார்க்க வேண்டும்.
இந்தியாவில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் தன்னை ஒரு சாதியாக உணரும்படியான சூழல் இருக்கிறது. காரணம் ஏதோ ஒரு குடியிருப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த குடி யிருப்பில் சாதிவாரியாக தெருக்கள், வீடு கள் இருக்கின்றன. நான் பல ஐஏஎஸ் அதி காரிகளிடம் பேசும் வாய்ப்பைப்பெற்ற வன். பலர் நான் பிறந்த கிராமத்திற்கு என் பிள்ளைகளை அழைத்துச் சென்ற தில்லை என்பார்கள். ஐபிஎஸ் அதிகாரி கள் பலரின் நிலையும் இதுதான். இப்படித் தான் இந்த நாடு, மாநிலம், மக்கள் இருக் கிறார். நம் கண் முன்னால் இருக்கும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகக் களம் காணாமல் தானாக மாறாது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதுபோன்ற விழாக்களிலிருந்து உரத்தைப் பெற்றுக் கொண்டு அடுத்த தலைமுறை சாதியப் பாகுபாடுகள் இல்லாமல், மனிதனை மனிதன் மதிக்கக்கூடிய, மகத்தான சிந்தனை உள்ள மாநிலமாக மாற்றுகிற பெரும் பணி யி்ல் ஈடுபடும் என்றார். முன்னதாக, விழா மலரை தக்கர் பாபா பள்ளி செயலாளர் எல்.சுந்தரவடி வேல் பெற்றுக் கொண்டார். இதில், ததீஒமு மாநில துணைத் தலைவர் யு.கே.சிவ ஞானம், ததீஒமு மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி, தவிச மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, ததீஒமு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கனகராஜ், தமுஎகச ஈரோடு மாவட்டத் தலைவர் சங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், ததீஒமு பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.