மறைமலைநகர், ஜூன் 11- மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட்டால் ஒரு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் கூறினார். போர்டு தொழிற்சாலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இந்த ஆலைக்கு உதிரிபாகம் தயாரித்து கொடுக்கும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளும் இந்தப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆலை நிர்வாகம் ஆலையை மூடுவதாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவித்தது. ஆனாலும், தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் வந்தது. இன்னும் ஒரு சில மாதங்களில் மூடப்படும் நிலை எற்பட்டுள்ளது. இந்த நிலை யில், தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு அதரவு தெரிவித்தும், ஃபோர்டு ஆலையை மூடுவதை கைவிட வலியுறுத்தியும் இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் மறைமலைநகரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் கே.சேஷாத்திரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன்,“ ஃபோர்டு ஆலையை மூடப் போவதாக அறிவித்த பின்னர் ஒரு தனியார் நிறுவனம் இந்த ஆலையை வாங்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை அதுகுறித்த தகவல் ஏதும் இல்லை என்றார். குஜராத் மாநில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை டாடா நிர்வாகம் வாங்கினாலும், தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே பணியாற்றி வரும் தொழிலாளர்க ளின் வேலைக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு எந்த உத்தரவாதமும் அளிக்கப்பட வில்லை. இதனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறி யுள்ளது.
போர்டு நிறுவனம் மூடப்பட்டால் மறைமலைநகரில் உதிரிபாகம் தயாரித்து வழங்கும் நூற்றுக் கணக்கான நிறுவனங்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலமும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் உடனடி யாக இப்பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு செங்கல் பட்டு மாவட்ட மக்களும் ஆதரவு நல்க வேண்டும் என்றும் கண்ணன் கேட்டுக்கொண்டார். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.தமிழரசி, மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் எஸ்.குணசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.