வைகாசி விசாகத்திற்கு திருச்செந்தூர் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”வரும் 12.6.22 அன்று வைகாசி விசாகத் திருவிழா. அன்றைய தினம் திருச்செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய்வார்கள். அன்றாட பயணி வண்டிகளில் கோடைகாலம் ஆதலால் இடம் போதாது. எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம்
இயக்கிட பொது மேலாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு சிறப்பு ரயில்;
பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு திண்டுக்கல் திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்;
செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் ;
செங்கோட்டை திருநெல்வேலி பயணி வண்டியை நீட்டித்து இயக்கிட வேண்டும்;
செங்கோட்டையிலிருந்து பழனிக்கு மதுரை வழியாக பயணி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் ;
செங்கோட்டை மதுரை பயணி வண்டியை நீட்டிப்பு செய்து இதனை இயக்க வேண்டும்.
மேற்கண்ட வழித்தடத்தில் சிறப்பு இரயில்களை இயக்கிட பொதுமேலாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.