tamilnadu

img

மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்... 

மதுரை
சென்னையைப் போல மதுரையிலும் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8 பேர் பலியாகியுள்ளனர். 341  குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு (மதுரை நகரம் மட்டும்) அமல்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ஊரடங்கு தொடர்பான பணிகள் முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மற்றும் மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுளார். தற்போது வரை பணியாற்றி வந்த தர்மேந்திர பிரதாப் ஐஏஎஸ் ராமநாதபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். 

;